பல்லவி
ஏ தாவுன நேர்சிதிவோ ராம
1எந்து3கிந்த கா3ஸி
அனுபல்லவி
ஸீதா லக்ஷ்மண ப4ரத ரிபுக்4ன
2வாதாத்மஜுலதோனாடே3 நாடகமே (தாவுன)
சரணம்
ஆலு வஜ்ரால ஸொம்முலடி3கி3ரோ
அனுஜுலு 3தல்லி-தண்ட்3ருலன்னமடி3கி3ரோ
ஸீ1லுலைன வர 4ப4க்துலு பிலிசிரோ
சிர காலமு த்யாக3ராஜ நுத நீவே (தாவுன)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏ/ தாவுன/ நேர்சிதிவோ/ ராம/
எந்த/ இடத்தில்/ கற்றாயோ/ இராமா/
எந்து3கு/-இந்த/ கா3ஸி/
எதற்கு/ இத்தனை/ தொல்லை/
அனுபல்லவி
ஸீதா/ லக்ஷ்மண/ ப4ரத/ ரிபுக்4ன/
சீதை/ இலக்குவன்/ பரதன்/ சத்துருக்கினன்/
வாத/-ஆத்மஜுலதோனு/-ஆடே3/ நாடகமு/-(ஏ தாவுன)
வாயு/ மைந்தன் ஆகியோருடன்/ ஆடும்/ நாடகத்தினை/ எவ்விடத்தில்...
சரணம்
ஆலு/ வஜ்ரால/ ஸொம்முலு/-அடி3கி3ரோ/
மனைவி/ வைர/ நகைகள்/ வேண்டினாளோ/
அனுஜுலு/ தல்லி/-தண்ட்3ருலு/-அன்னமு/-அடி3கி3ரோ/
பின்னோர்/ (மற்றும்) தாய்/ தந்தையர்/ உணவு/ வேண்டினரோ/
ஸீ1லுலைன/ வர/ ப4க்துலு/ பிலிசிரோ/
நல்லொழுக்கமுடைய/ சிறந்த/ தொண்டர்கள்/ அழைத்தனரோ/
சிர/ காலமு/ த்யாக3ராஜ/ நுத/ நீவு/-(ஏ தாவுன)
பல/ காலம்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ நீ/ எவ்விடத்தில்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - வாதாத்மஜுலதோனாடே3 - வாதாத்மஜுலதோனாடு3.
3 - தல்லி-தண்ட்3ருலு - தலி-த3ண்ட்3ருலு : இரண்டு சொற்களுமே சரியாகும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - எந்து3கிந்த கா3ஸி - எதற்கித்தனை தொல்லை? தொல்லை யாருக்கு? இராமனுக்கா? அல்லது தியாகராஜருக்கா? கீழே கொடுக்கப்பட்டுள்ள, இந்த பாடலின் கருத்தின்படி, 'தொல்லை' இராமனுக்கு என்பது விளங்கும்.
4 - ப4க்துலு பிலிசிரோ - தொண்டர்கள் அழைத்தனரோ? - தியாகராஜர் தனது 'முத்து மோமு' என்ற ஸூர்யகாந்தம் ராக பாடலில் கூறவதாவது -
"(இறைவனின் அவதாரம்) நிகழுமென நெடுநாள் உள்ளம் நெகிழ்ந்து, காத்து நிற்போர்முன் இராமனின் கொஞ்சுமுகம், எவ்விதம் தோன்றியதோ!"
தியாகராஜர், தனது 'ஏலாவதாரமெத்துகொண்டிவோ' என்ற 'முகாரி' ராக கிருதியில் இதுபோன்ற கேள்விகளைக் கேட்கின்றார் - ஆனால் பரவசமாக -
ஏன் அவதரித்தாயோ இராமனாக?
போர் புரிவதற்கோ? அயோத்தியை ஆள்வதற்கோ?
யோகியர் (உன்னைக்) காண்பதற்கென்றோ?
பிறவிப் பிணியாளிகளைக் காப்பதற்கென்றோ?
நூற்றுக் கணக்கான ராக இரத்தின மாலைகளைப் புனைந்த தியாகராசனுக்கு வரமருள்வதற்கென்றோ?
எனவே, இந்த கிருதியில் அவர் கேட்கும் கேள்களின் கருத்தாவது -
"இராமா, நீ மனவிக்கு நகைகள் பெற்றுத்தரவோ, பின்னோர் மற்றும் தாய்தந்தையருக்கு உணவளிக்கவோ இந்த அவதாரம் எடுக்கவில்லை. நல்லொழுக்கமுடைய, சிறந்த தொண்டரின் அழைப்புக்கிணங்கி, அவர்களைப் பேணுதற்கு, அவதாரம் எடுத்தாய். அப்படியிருக்க, நீ என்னைக் காவாதிருப்பதினால், நீ அவதரித்தது, காப்பதாக நாடகமாடுவதற்கென்றே நான் கருதுகின்றேன்."
Top